வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூன்று செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விவசாயம், மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்துஅனுப்பக்கூடியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.