உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு செல்லும் மந்திரி….!!

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் போர் ஏற்படும் அபாயமுள்ளதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரியான லீஸ் பதற்றத்தை தணிக்க ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.