முதல்வர் நாற்காலியில் அஜித்: போஸ்டரால் பரபரப்பு

அஜித் குமாருக்கு அரசியலுக்கு வரும் ஆசையே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தன் ரசிகர் மன்றங்களை கூட கலைத்துவிட்டார். தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று அண்மையில் கேட்டுக் கொண்டார். இப்படி அவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறார். இந்நிலையில் அஜித் குமார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த ரசிகர்கள். அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது, எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்