வாணியம்பாடியில் தொடர் மழை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலாற்றில் மற்றும் சின்ன ஆற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகின்றது இந்த வெள்ளப்பெருக்கு வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் ஆற்றோரம் இருக்கும் வீடுகளில் புகுந்து மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இவர்களை தாழ்வான பகுதிகளில் இருந்து மேட்டுப்பகுதியில் இருக்கும் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மக்களை தங்க வைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மக்கள் யாரும் ஆற்றில் குழிக்கவோ ஆற்று பகுதிகளுக்கு செல்லவோ கூடாதென்று ஒலிப்பெருக்கியின் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். தமிழ் மலர் செய்திகளுக்காக.P.சுரேஷ் (Reporter) வாணியம்பாடி .