டாக்டர் அம்பேத்கர் புதிய பேருந்து நிலையம்..

பொழிச்சலூர் டாக்டர் அம்பேத்கர் புதிய பேருந்து நிலையம் அமைச்சர் தா .மோ. அன்பரசன் திறந்துவைத்தார்

தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர்
திரு/ மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய பொழிச்சலூர் ஊராட்சியில் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் திரு/ இ.கருணாநிதி MLA, அவர்களின் 2020-2021 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ,19.51,லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக(06/09/2021) திங்கள் கிழமை பொழிச்சலூரில் டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையத்தை மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர்
திரு/ தா.மோ. அன்பரசன் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர், திறந்து வைத்தார்.

மாண்புமிகு அமைச்சர் திரு/ தா.மோ.அன்பரசன் அவர்களை பொழிச்சலூர் பிரேம் நகர் கிளை கழக செயலாளர் திரு/ V. ஜோசப் ஏற்பாட்டில் செண்டை மேளம் முழங்க குதிரை படையுடன் பேண்டு வாத்தியம் முழங்க பெண்கள் மலர்தூவி அமைச்சர் தா. மோ.அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் E.கருணாநிதி அவர்களை வரவேற்றனர் .

இந்நிகழ்ச்சியில் புனித தோமையர் மலை ஒன்றிய செயலாளர் த.ஜெயக்குமார், பிரேம் நகர் கிளைக் கழகச் செயலாளர் V.ஜோசப்,
G.குமார், வனஜா தயாளன், ஞானமனி, மற்றும் அரசு அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ கலைச்செல்வன்
கிராம ஊராட்சி அலுவலர் கார்த்திகேயன் பொழிச்சலூர் ஊராட்சி செயலர் திருமதி/ பொற்கொடி பொழிச்சலூர் திமுக கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி தமிழக அரசு சார்பாக விழா ஏற்பாடு அனைத்தையும் சிட்டலபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு/ சிவகலை செல்வன் மற்றும் கிராம ஊராட்சி அலுவலர் திரு/ C . கார்த்திகேயன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலை செல்வன் அறிவுரையின் படி பொழிச்சலூர் ஊராட்சி செயலர் திருமதி/ பொற்கொடி முன்னின்று சிறப்பாக செய்து முடித்தார்,

இவ்விழாவில் பம்மல் சங்கர் நகர் S6 காவல்துறை ஆய்வாளர் திரு/ விஜயகுமார் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் திரு/ கருப்புசாமி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

செய்தி: S.MD.RAWOOF