மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி நினைவஞ்சலி

என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக வாஜ்பாய் (93) கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று வாஜ்பாயின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி (PM Narendra Modi) மரியாதை செலுத்தினார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா போன்றோரும் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.