இந்தியா vs இங்கிலாந்து: பரபரப்பான கடைசி நாள் ஆட்டம்

364 ரன்கள் அடித்து வலுவான நிலையில் முதல் இன்னிங்சை முடிந்தது இந்திய அணி. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் மிகச் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனை, இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்தது என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 364 ரன்கள் அடித்து வலுவான நிலையில் முதல் இன்னிங்சை முடிந்தது இந்திய அணி. 

பின் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 391 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலிருந்தே அதிர்ச்சிகள் காத்திருந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்சில் 5 ரன்களுக்கு வெளியேறினார். விராட் கோலி (Virat Kohli) சர்மா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது. பின்பு புஜாரா மட்டும் ரகானே ஜோடி. மிகவும் பொறுமையாக ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தது. புஜாரா 206 பந்துகள் பிடித்து 45 ரன்கள் எடுத்திருந்தார். ரகானே 146 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தார்.