இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா மூவண்ணக் கொடி பொழிச்சலூர் ஊராட்சியில் ஏற்றினார்கள்!

இந்திய திருநாட்டின்
75 ஆவது சுதந்திர தின கொடியேற்றும் விழா செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை ஊராட்சி மன்ற செயலர் திருமதி/ பொற்கொடி தேசிய கொடியின் பாடல் ஒலிபெருக்கிகள் மூலம் பாடல் ஒலிக்க செய்து இந்திய நாட்டின் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொது மக்கள் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

75 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும்காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

செய்தி: S.RAWOOF