மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினம்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள்,  டி.ஆர்.பாலு, கனிமொழி  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இரு இடங்களிலும் கருணாநிதி படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மு.கருணாநிதி 50 ஆண்டுகள் திமுகவின் (DMK) தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.