உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை!

தமிழகத்தில்
9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள், விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நெல்லை, தென்காசி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

NEWS: S.MD.RAWOOF