மணப்பாறை அருகே 3 நாட்களுக்கு முன்பு மயமான 17 வயது சிறுமி குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை…

சிறுமி மாயம் மணப்பாறை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்?
மணப்பாறை அருகே 3 நாட்களுக்கு முன்பு மயமான 17 வயது சிறுமி குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர் மணப்பாறையை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியின் 17 வயது மகள் கடந்த 20 ந் தேதி மாயமானதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், இந்தநிலையில் புகார்அளித்தும் மூன்று நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை இல்லையென சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர், அவர்களிடம் மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மனமல்லி சந்தேகபடும் இளைஞரின் உறவினர்களை அழைத்து உரிய விசாரணை செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடபட்டது, போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் ந.மதனகோபால், ஒன்றிய துணை செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்