மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் திரு/ இறையன்பு IAS கடிதம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர்,திரு/ இறையன்பு IAS, அவர்கள் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு செல்லும்போது, சைவ, அசைவ உணவு வகைகள் மற்றும் அவருக்கு பிடித்தமான உணவு வகைகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு IAS, மாவட்டங்களுக்கு, ஆய்வு மேற்கொள்ள வரும் போது சாதாரண உணவை மட்டும் ஏற்பாடு செய்தால் போதும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் திரு/ இறையன்பு IAS, அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக நான் வரும்போது சாதாரண காலை உணவு, இரவு உணவு மற்றும் 2 காய்கறிகளுடன் கூடிய சைவ மதிய உணவை ஏற்பாடு செய்யுங்கள். விரிவான ஏற்பாடுகள் தேவையில்லை.

ஆடம்பரமான ஏற்பாடுகளை தவிர்க்கவும். இது எனக்கு வசதியாக இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் திரு/ இறையன்பு IAS, கூறியுள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்