D-2 அண்ணாசாலை போக்குவரத்து ஆய்வாளர் திரு/ ராமதுரை தலைமையில் வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (JUNE-7 ஆம் தேதி) தளர்வில்லா ஊரடங்கு அறிவித்து இருக்கும் இந்நிலையில் தமிழ் நாடு காவல் துறை டிஜிபி திரு/திரிபாதி அவர்களின் உத்தரவு படி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு/ சங்கர் ஜிவால் அவர்களின் ஆலோசனையில் தகுந்த அரசு இ-பதிவு இல்லாமல் செல்லும் வாகனங்களை D-2 அண்ணாசாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ ராமதுரை அவர்களின் தலைமையில் D-2 அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள ஸ்பென்சர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சிக்னல் அருகில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், மருத்துவ அவசரம்,மெடிக்கல் சம்மந்த பட்ட ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,பத்திரிக்கை துறையினர்,அடையாள அட்டை காண்பித்து சென்றனர். அத்தியாவசிய இன்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தனர், s.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்