மடிப்பாக்கம் S-7 போக்குவரத்துக்கு காவல் துறை வாகன பரிசோதனை!

மடிப்பாக்கம் S-7 போக்குவரத்துக்கு காவல் துறை வாகன பரிசோதனை!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நேர கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியது, இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதியில் இருந்து 24-ஆம் தேதி வரை மளிகை கடைகள் காய்கறி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நேர கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் 10:00 மணி வரையில் கடைகளுக்கு அனுமதி அளித்திருந்தது,
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர்களால் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், இந் நிலையில் மடிப்பாக்கம் S-7 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமாட்சி மருத்துவமனை அறுகில் மடிப்பாக்கம் S-7 காவல் நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹரிதாஸ் தலைமையில், தலைமை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், வாகன தணிக்கையில் தகுந்த மருத்துவ அவசரம் இறுதிச் சடங்கு மெடிக்கல் ஊடகத்துறை சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி அளித்தனர், முக கவசம் தனி நபர் இடைவெளி தலை கவசம் அணியாதவர்கள் இ- பதிவு அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்து
அனுமதி பெறாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்,

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்