அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அறிவிப்பு!

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைமை கழகத்தில் வருகின்ற (7-05-2021) வெள்ளிக்கிழமை மாலை 4 30 மணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி k. பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,