மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்

மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.

மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பிவிட்டன. ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பிவிட்டன.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, அதிகமான அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க இரு 5 நட்சத்திர ஓட்டல்களை மும்பை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்த இரு நட்சத்திர ஓட்டல்களையும், இரு தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டில் விட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள இரு நட்சத்திர ஓட்டல்களிலும் இன்று (செவ்வாய்) முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கைகளை ஆக்ஸிஜன் வசதியுடன் உருவாக்கவும் மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

செய்தியாளர் ரசாக்

தமிழ்மலர் மின்னிதழ்