பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி தேவதானம் பகுதி தாயுமானவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மற்றும் மதுபானக்கடை அருகே சாலையோரம் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் நிலை பாதிக்கப்பட்டு அசைவற்ற நிலையில் மூன்று நாட்களாக உயிருக்கு போராடி வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் அந்நபருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் அரவிந்த் குமார்

தமிழ்மலர் மின்னிதழ்