ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்..

செய்தியாளர் தமீம் அன்சாரி..

தமிழ் மலர் மின்னிதழ்.