“குடியிருந்த கோயில்”

மக்கள் திலகம் எம்ஜியார் நடித்த (1968)”குடியிருந்த கோயில்”(15.03.1968) படம் வெளியாகி 53 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இப்படத்தில் எம்ஜியார் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பார். கவிஞர் புலமைப்பித்தன் இப்படத்தில் தான் “நான்யார் நீயார்”என்ற பாடலுடன் எம்ஜியார் படத்தில் அறிமுகமானார். “குங்குமப் பொட்டின் மங்கலம் “என்ற பாடலை ரொஸானாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதினார். ஹிந்தியில் 1962 இல் வெளியான “சைனா டவுன்”(china town) என்ற படத்தின் மறுபதிப்பாகும்.
கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய “ஆடலுடன் பாடலைக் கேட்டு”என்ற பாடல் ஜனரஞ்சகமானது.கே.ஷங்கர் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் அமோக வெற்றி பெற்ற படம்” குடியிருந்த கோயில் “..
Sgs gampola