நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 46

அறுசுவைகளில் கசப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களை நாம் தொடர்ந்து பார்த்து வந்தோம் அதைத்தொடர்ந்து துவர்ப்பு சுவையுடைய உணவு பொருட்களை என்னவென்று பார்ப்போம் துவர்ப்பு சுவையுடைய பொருள்களில் வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வாழைக்காய் உள்ளதாக சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

 இதில் வாழைக்காயில் புளிப்பு சுவையும் சேர்ந்து உள்ளதாகவும் கருதப்படுகிறது…

கருவுற்றிருக்கும் பெண்கள் சில மாத காலங்கள் வரை பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய அனைத்து குறைபாடுகளையும் களைவதில் வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.

வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.

மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வரமொருமுறை அல்லது இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வர நீண்ட நாட்காளாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை வாழைப்பூ தடுக்கும்.

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வலைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு அதீத வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்றுப்போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் இழப்பு உண்டாகிறது. வாழைப்பூவை வயிற்றுப்போக்கு நின்ற பிறகு பக்குவம் செய்து சிறிய அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும்.

மனிதர்கள் அனைவருக்கும் கண்பார்வை என்பது மிகவும் அவசியம். எனவே நமது கண்பார்வை திறனை நலமாக வைத்து கொள்வது நமது பொறுப்பாகும். வாழைப்பூவில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

வாழைப்பூவை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஊட்டச்சத்தின்மையால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது போன்ற அனைத்து பிரச்னைகளையும் வாழைப்பூ தீர்க்கிறது.

மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் விரைவில் குணமாக வாழைப்பூ உதவுகிறது. இதில் இருக்கும் சத்துகள் மலச்சிக்கல் பிரச்னையை போக்கி, மூலம் காரணமாக ஏற்பட்ட புண்களை வெகு விரைவில் ஆற்றுகிறது.

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். இந்த ரத்த சோகை குறைபாடு குழந்தைகள், பருவ வயதினர் போன்றோரிடத்தில் அதிகம் இருக்கிறது. வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.

வாழை பூ போலவே வாழை காயிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது குறிப்பாக வாழைப்பிஞ்சு உண்பதுதான் சிறப்பு…வழைக்காயில் பல வகைகள் உண்டு.  இருந்தாலும் மொந்தன் ரகம் வாழைக்காயைத்தான் அதிகமாக சமைப்பது வழக்கம்.

மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் மாவுச் சத்தும் அதிகம். இதனுடன் மிளகு சீரகம் சமைத்தல் நலம்.  நீரிழிவு நோய் உள்ளவரகளுக்கும் மதிய உணவாக இது பயன்படும்.

வாழைக்காயை சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாக சீவியெடுத்தால் போதும்.  உள் தோலுடன் சேர்ந்து சமைப்பதே சிறந்தது.

சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி புளி மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள்.  இப்படி துவையலாக்ச் சாப்பிடுவதால் ரத்த விருத்தியும் பலமும் உண்டாகும்.  வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல் கழிச்சல் இருமல் ஆகியவையும் நீங்கும்.  அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவதும் பத்தியத்து ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.  பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அஜூரணம் புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்புப் போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம்.  வாழைக்காய் வறுவல்  வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிக..மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள் வாழைக்காயை தவிர்க்கவேண்டும்.

எனவே துவர்ப்பு சுவையுடைய வாழைப்பூ, வாழைக்காய் பயன்களை நாம் நன்கு உணர்ந்து அளவோடு சமைத்து உண்டு நமது ஆரோக்கியத்தை காப்போமாக…

 நோய் வருமுன் காப்போம்…!

 நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து….!

தொகுப்பு:-சங்கரமூர்த்தி… 7373141119