சிறுத்தைகள் நடமாட்டம் – மக்கள் பீதி.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பங்களா தோப்பு அருகே பாலாற்றாங்ரை ஓரமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதி .வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முகாமிட்டு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் ஜெயராம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அங்கிருந்த மல்லிகா ,சம்பூர்ணம் உள்ளிட்ட பெண்கள் தென்ன ஓலையில் துடைப்பம் சீவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நாய்கள் துரத்தி சென்று அங்குள்ள புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்

வாணியம்பாடி காவல்துறை மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் சுரேஷ், வாணியம்பாடி

தமிழ் மலர் மின்னிதழ்