கொரோனாவின் புதிய 2ம் வீரியமிக்க வைரஸ்

கொரோனாவின் புதிய 2ம் வீரியமிக்க வைரஸ் உலக நாடான இங்கிலாந்தில் பெரிய அளவில் பரவி வருகிறது. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர்கொரோனோ 2ம் ரக வைரஸ்ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள் முதலில் ஆன்லைன் மூலம் அவர்களது அங்க அடையாளங்கள் , ரேகைகள் படம் பிடித்தும், அவர்களது உடல் நிலை குறித்தும் , அவர்களுக்கு என்னென்ன உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் செய்திகள் ஆராயப்பட்டு பின்னர் விமானத்தில் அனுமதிக்க படுகின்றனர். அவர்கள் விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, மருத்துவ குழு முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க படுவார்கள் எனவும், கொரோனா வீரியம் மிக்கவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்கிற தகவலும் அரசால் வழங்க பட்டுள்ளது.

செய்தி ஷா