மக்களவையில் மத்திய அரசு சார்பில் மசோதா தாக்கல்!

ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மக்களவையில் மத்திய அரசு சார்பில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பன்னாடி வாதிரியான் ஆகிய ஏழு பிரிவுகளைச் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து அடுத்தக்கட்ட அமர்வில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்