ஜனவரி 15 : இன்றைய முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி 15 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1977 – சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

1981 – லேக் வலேசா தலைமையிலானபோலந்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் குழு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை வத்திக்கனில் சந்தித்தது.

2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

2005 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.

2005 – செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007 – சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

2013 – எகிப்தில் இராணுவ வீரர்களி ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

2016 – சோமாலியாவில் அல்-சபாப் இசுலாமியப் போராளிகளுடனான சமரில் கென்ய இராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.

2019 – சோமாலிப் போராளிகள் கென்யா, நைரோபியில் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர், 19 பேர் காயமடைந்தனர்.