வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரதீய கிசான் சங்க தலைவர் ஜித்தேந்தர் சிங் மன் சர்வதேச கொள்கைகள் குழு தலைவர் பிரமோத் குமார் ஜோஷியும் அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வத் ஆகியோர் 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற வாதத்தில் வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்