குற்றவியல் நடைமுறை..தொடர்-3

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bailable offences)

மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non – Bailable)ஆகும்.

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும்.

ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும்
ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல்
தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும்,
குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும்
இந்த கைது நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து
வைப்பதே சட்டத்தின் குறிக்கோள்.

எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன.

மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில்
விடுவிக்கும் அதிகாரம் உள்ளது.

அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில்
ஈடுபட்டவர்களை உரிய
அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில்
விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய
குற்றங்களை (உடனே)
பிணையில் விடக்கூடிய
குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள்
என்றும் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும்
பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக
வழங்கப் பட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய
குற்றங்கள் அனைத்தும்
பிணையில் விடும்
குற்றங்களாகவும், 3
ஆண்டுகளுக்கு மேல்
தண்டனை அளிக்கக்கூடிய
குற்றங்களை பிணையில்
விடமுடியாத குற்றங்களாகவும்
நீதித்துறை வட்டாரத்தில்
கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக
இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில்
விடமுடியாத குற்றங்களையும்
அடையாளம் காண குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தை
நாடுவதே நல்லது.
குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின் படி பிணையில்
விடமுடியாத குற்றங்களை
செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது
செய்ய முடியும். இவ்வாறு
கைது செய்வதற்கு குற்றவியல்
நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய
குற்றங்களை செய்தவர்களை,
அதாவது காவல்துறை
அதிகாரியே பிணையில்
விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை
அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.
அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல்
நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு
முடிவுக்கு வருவது,
காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும்.
ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து
பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நடவடிக்கை
எம்மாதிரியானதாக
இருக்கவேண்டும் என்று
தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு
முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள
குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில்
விடமுடியாத குற்றமாக
இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல்

தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை
சட்டரீதியாக விசாரணை, கைது
உள்ளிட்ட நடவடிக்கைகளை
மேற்கொள்ள முடியும்.

த.விஜய் பாண்டியன்
வழக்கறிஞர்