கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து தடை

புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடற்கரை பகுதிகளான சிலுவை நகர், கோவளம், கீழமணக்குடி, சின்னமுட்டம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலும்,  2000-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் மேடான பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.