கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு–அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வந்தது.

கொரோனா தொற்றுக்கு எதிராக 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என்றும், மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.