புதிய கால்வாய் மூடி

சென்னை :
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் ஸ்ட்ரீட் ரைடர் கடை வாசல் முன்பு கால்வாய் மூடி உடைந்து திறந்த நிலையில் மற்றும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்த நிலையில் ஆபத்தாக இருந்தது.

சனிக்கிழமை மாலை அந்த பகுதியில் சென்ற தமிழ் மலர் தலைமை செய்தி ஆசிரியர் N. அப்துல் சமது அவர்கள் அதனை பார்த்த போது உடனே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 14 வட்டம் 183 கொட்டிவாக்கம் உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி AE திரு, பாலு அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு AE திரு, பாலு அவர்கள் அவருடைய உதவியாளர் திரு, வடிவேலுவை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரியப்படுத்தினார்.

இதற்கு திரு, வடிவேல் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு கண்டு மற்ற மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் உடைந்த சாக்கடை கால்வாய் மூடியை அகற்றி புதிய கால்வாய் மூடி போடப்பட்டது.

இதற்கு உடனே தக்கநடவடிக்கை எடுத்த AE திரு, பாலு மற்றும் உதவியாளர் திரு, வடிவேலு மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ்மலர் மின்னிதழ் மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

.A.சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்