பறவையை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் கிடைத்த புதையல்!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் பறவைகள் சண் டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார். என்னவோ என்று அதை எடுத்து த டவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப் பொருட்களை தேடிஎடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது தெரியவந்திருக்கிறது.

உடனே வீட்டுக்குப் போய் தனது மெட்டல் டிடெக்டர், இரண்டு பெரிய பைகள், ஒரு மண்வெ ட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதே வயலுக்கு திரும்பியிருக்கிறார்.

ஓரிடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப, மண்ணை அகற்றிப் பார்த்தால் ஒரு வளையல் போல ஏதோ இருந்துள்ளது.

வளையலை எடுக்கப்பார்த்தால், அது வளையல் அல்ல, ஒரு பானையின் வாய்! பானையை பத்திரமாக எடுத்த அவர், அதற்குள் பார்த்த போது ஏற்பட்ட அ திர் ச் சி யில் கொஞ்ச நேரம் அப்படியே உ ட்கா ர் ந் து வி ட்டாராம். காரணம், அதற்குள் 1,300 தங்க நணயங்கள் இருந்துள்ளன. அவை கி.பி 40க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, ரோமானியர்களை எதிர்த்து போரிட்ட புரட்சிப்பெண்ணான Boudicca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள், ஆக மொத்தம் 1,300 நாணயங்களின் மதிப்பைப் பார்த்தால், அது சுமார் 800,000 பவுண்டுகள். தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது.

K.N. ஆரீப்
செய்தியாளர்
தமிழ்மலர் மின்னிதழ்.