ரோஜா கொடுத்த பரிசு!

ஆந்திர முதல்வர் பிறந்தநாளுக்கு நடிகை ரோஜா கொடுத்த பரிசு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் MLA-வும் நடிகையுமான ரோஜா செய்த நெகிழ்ச்சியான செயலுக்கும் நெட்டிசன்கள் பாராட்டு
தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர் இல்லாமல் அரசு பெண்கள் காப்பகத்தில் வசித்துவரும் புஷ்பகுமாரி என்ற மாணவியை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கல்வி செலவை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் இல்லாமல் பெண்கள் காப்பகத்தில் தங்கி இருக்கும் மாணவிக்கு ரோஜா செய்த இந்த நெகழ்ச்சியான உதவி நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

S. செந்தில்நாதன்
இணையாசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.