மதுரை: குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்கள்.

உடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் k.ராஜு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.ப. வேலுமணி, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்.
தமிழ்மலர் மின்னிதழ்